நாமக்கல், பிப். 10: பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைய, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை பாஜ நிர்வாகிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் சுப்புரத்தினம், செயலாளர் அருள், பொருளாள் சீரங்கன், இணைச்செயலாளர் சரவணன் ஆகியோரை, நகர பாஜ தலைவர் சரவணன் நேரில் சந்தித்து, பிரதமரின் ₹5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு திட்டத்தில் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளினர்கள் ஆகியோரை சேர்க்க வேண்டும். இதற்காக சிறப்பு முகாம் நடத்த ஒத்துழைப்பு தரும்பபடி கேட்டுக்கொண்டார். அப்போது பாஜ நகர பொதுச்செயலாளர் செந்தில், நகர மீடியா பிரிவு தலைவர் கமலநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.