×

ஐடிஐகளில் நேரடி மாணவர் சேர்க்கை; 15ம் தேதி வரை நடக்கிறது


கிருஷ்ணகிரி, பிப்.10: கிருஷ்ணகிரி மாவட்ட  நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓசூரில் உள்ள அரசு ஐடிஐ மற்றும் தனியார் ஐடிஐகளில் உள்ள தொழிற்  பிரிவுகளுக்கு 2020-21ம் ஆண்டிற்கான காலியிடங்களை நிரப்ப, வரும் 15ம் தேதி வரை  நேரடி மாணவர் சேர்க்கை ஓசூர் அரசு ஐடிஐயில்  நடக்கிறது. இதில் சேர 14 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள்  விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14,  உச்ச வயது வரம்பு இல்லை. இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்  வெல்டர்(1 வருடம்) பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம்.கடைசலர் (2 வருடம்) ஆகிய தொழிற்  பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப  கட்டணமாக ₹50 மற்றும் சேர்க்கை கட்டணம் அலுவலகத்தில் ரசீது வாயிலாகவும்  விண்ணப்பதாரர் செலுத்தலாம்.

Tags : ITIs ,
× RELATED திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3,000...