×

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைப்பு

தஞ்சை, பிப்.10: தஞ்சையில் 3 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். தஞ்சை கீழவாசல் தாசப்பன் நாயக்கன் சந்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் செந்தூர்வேலன்(25), இதேபோல் தஞ்சை அருகே சூரக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் ராஜா (எ) ராஜாராமன்(51) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம், சின்னாளப்பட்டி மேலக்கோட்டை கிராமம் பாறைத்தெருவை சேர்ந்த பாண்டீஸ்வரன் மகன் ராஜபாண்டி(20). 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணத்தின் அடிப்படையில் மூவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : persons ,Trichy Jail ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...