×

இறைச்சி கடைகளில் ஆடு, மாடுகள் வெட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய மனு: உயர் நீதிமன்ற தள்ளுபடி

சென்னை: இறைச்சி கடைகளில் ஆடு, மாடுகள் வெட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. சென்னையில் சட்ட விதிகளை மீறி அதற்கென உள்ள அறுப்புக் கூடங்களில் பலியிடாமல், விற்பனை செய்யும் கடைகளிலேயே வெட்டப்படுவதாக முரளிதரன் வழக்கு தொடர்ந்தார். எந்த இடம் எனக் குறிப்பிடாமல், பொத்தம் பொதுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags : Chennai ,Chief Justice ,High ,Court ,
× RELATED வளர்பிறை சுப முகூர்த்த நாளில் தேர்தல்:...