×

கரூர் சுக்காலியூர் பைபாஸில் கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை பணி வாகனஓட்டிகள் திணறல்

கரூர், பிப்.10: கரூர் சுக்காலியூர் மதுரை பைபாஸில் தார்ச்சாலை பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் ஜல்லிகற்கள் பெயர்ந்ததால் வாகனஓட்டிகள் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் இருந்து சுக்காலியூர் பகுதிக்கு பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் செல்லாண்டிபாளையம் பகுதியை தாண்டியதும் மதுரை பைபாஸ் சாலைக்கு செல்லும் மற்றொரு சாலை பிரிகிறது. குண்டும் குழியுமாக இருந்த இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனடிப்படையில், கடந்த மாதம் சாலை சீரமைக்கப்பட்டு தார்ச்சாலை அமைக்கும் வகையில் முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு பிறகு தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக தொடர் வாகனங்கள் சென்று வருவதால் திரும்பவும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சாலையை எளிதில் கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த சாலையில் தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி சாலையை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Darshala ,Karur Sukkaliyur ,
× RELATED கரூர் சுக்காலியூர் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்