×

அரசு ஒப்பந்ததாரர் சாவு

நாகர்கோவில், பிப்.9: நாகர்கோவில் கோட்டார் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சபேசன் (49). அரசு காண்ட்ராக்டர். கடந்த 28ம் தேதி நண்பரின் மகள் புப்புனித நீராட்டு விழாவுக்கு சென்று வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் வீட்டுக்கு வந்தவர் பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீர் என நினைத்து குடித்துள்ளார். மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு சபேசன் இறந்தார். இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags :
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்