×

மதுவிலக்கு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

நாமக்கல், பிப். 9:நாமக்கல் மதுவிலக்கு பிரிவு சார்பில், சிலுவம்பட்டி, எர்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் நடந்தது. தொடர்ந்து கள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள்  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், போதைப் பொருட்கள் பற்றிய புகார்கள் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து உழவர் சந்தை அருகில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு பிரிவு எஸ்ஐ தேசிங்கன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Tags : Prohibition police awareness campaign ,
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்