×

போர் பதற்றம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு, அங்கு வசித்து மற்றும் பணிபுரிந்து வரும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான மற்றும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Premalatha ,Chennai ,Demutika ,Secretary General ,Middle East ,United Arab Emirates ,
× RELATED மோடியின் கூட்டத்தில் அண்ணா, ஜெ படத்தை...