×

மலைச்சாரலின் 476வது கவியரங்கம்

ஊட்டி,பிப்.9: நீலகிரி மாவட்ட தமிழ்க் கவிஞர் சங்கத்தின் மலைச்சாரலின் 476வது கவியரங்கம் ஊட்டியில் நடந்தது. நீலகிரி மாவட்ட தமிழ்கவிஞர் சங்கத்தின் மலைச்சாரலின் 476வது கவியரங்கம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நடந்தது. தலைவர் பெள்ளி தலைமை வகித்தார். இதில் சங்கத்திற்கு புதிதாக உறுப்பினர்களை ோசர்ப்பது குறித்தும், நடப்பு ஆண்டில் பல புதிய புத்தகங்களை வெளியிடுவது குறித்தம் விவாதிக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கவிஞர்கள் மாரிமுத்து, சோலூர் கணேசன், நாகராஜ், மணி அர்ஜூணன், ஜேபி., ஜனார்த்தனன், சதாசிவம், மயில்வாகனன், சுமித்ரா, சுதா, சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கவிதைகளை வாசித்தனர். முடிவில், செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு