×

குளத்தூர் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து 3பேர் படுகாயம்

குளத்தூர்,பிப்.9: குளத்தூர் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து 3பேர் படுகாயமடைந்தனர். குளத்தூர் அருகே உள்ள சூரங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் லிங்குசாமி மகன் நரேன்(27), முருகன் மகன் மூர்த்தி(27), கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த சின்னமருது மகன் கவியரசு(26). இவர்கள் மூவரும் ஒரே பைக்கில் சூரங்குடியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக குறுக்குச்சாலைக்கு சென்று கொண்டிருந்தனர். குளத்தூரையடுத்த கு.சுப்பிரமணியபுரம் விலக்கு அருகே வரும்போது திடீரென பைக்கிலிருந்து நிலை தடுமாறி 3பேரும் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு குளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து குளத்தூர் எஸ்ஐ கங்கைநாதபாண்டியன் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : Kulathur ,
× RELATED குளத்தூரில் சிறுவர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாம்