×

தனியார் மயமாக்க கூடாது மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப். 9:  மதுரையில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில்  நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோ.புதூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம்  முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில துணை பொது செயலாளர் தமிழ்செல்வம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்  மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசு, மின்வாரிய தலைவர், மின்வாரிய இணை இயக்குனர் அலுவலக நிர்வாகத்தை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநில இணை செயலாளர் முத்துலிங்கம், எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சங்க மாநில செயலாளர் ராஜாங்கம், ஜனதா சங்க மண்டல செயலாளர் சசாங்கன், தொமுச பாண்டி, ராஜேஷ் கண்ணன், ஐக்கிய சங்க நிர்வாகி கருப்பசாமி, பழனிச்சாமி உள்பட பலர் பங்ேகற்றனர். 

Tags : Demonstration ,power plant employees ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்