×

லாரி உரிமையாளரை கொல்ல முயற்சி

புழல்: சோழவரம் அடுத்த காரனோடை முனிவேல் நகரை சேர்ந்தவர் ரஜினிகாந்த்(44). இவர், லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர் ரஜினிகாந்திடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும், அவரிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டு, வாக்குவாதம் செய்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் அங்கிருந்து விரட்ட முயற்சித்தார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் ரஜினிகாந்தை பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றனர். இதில் சாதுர்யமாக அவர் பெட்ரோல் தன் உடலின் மீது படாமல் விலகி கொண்டார். புகாரின்பேரில் சோழவரம் போலீசார்வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (எ) சூர்யா, கிஷோர் மற்றும் சூர்யா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. …

The post லாரி உரிமையாளரை கொல்ல முயற்சி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Rajinikanth ,Munivel town ,Cholavaram ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!!