×

17ம் தேதி நடத்த மீனவர்கள் சங்கம் முடிவு அய்யம்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டம்

பாபநாசம், பிப்.8: பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் பாமக சார்பில் கூட்டம் நடைபெற்றது. உழவர் பேரியக்க மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அசோக்குமார், நகர தலைவர் காளிதாஸ், உழவர் பேரியக்க நகர செயலர் சின்னதுரை முன்னிலை வகித்தனர். நகர செயலர் முரளிதரன் வரவேற்றார். மாநில துணைச் செயலர் வெங்கட்ராமன், தலைமை நிலையபேச்சாளர் தமிழ்செல்வன், மாவட்ட செயலர் சங்கர், மாநில இளைஞரணி செயலர் விஜயராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் அய்யம்பேட்டை கால்நடை மருந்தகம் அருகில் தபால் நிலையம் செயல்பட வேண்டும். அய்யம்பேட்டை திருநகர், நியூ டவுன், ராயல் டவுன், ஆர்.எஸ் நகர் பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : meeting ,People's Party ,Ayyampettai ,
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்...