×

ஆலோசனை கூட்டத்தில் முடிவு கீழ்வேளூர் அருகே வெட்டாற்றில் மணல் திருடிய ஒருவர் கைது

கீழ்வேளூர், பிப்.8: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கோகூர் வெட்டாற்றில் மணல் அனுமதியின்றி அள்ளப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் திருட்டுதனமாக அள்ளுவது தெரிந்தது. இதில் கோகூரை சேர்ந்த தவசிமுத்து மகன் அன்பழகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய கோகூரை சேர்ந்த தங்கராஜ் மகன் இளையராஜா, ஆனைமங்கலம் மஞ்சவாடியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் அற்புதராஜ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். மணல் அள்ள பயன்படுத்திய இரண்டு மாட்டு வண்டிகளை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kizhvelur ,Vettar ,
× RELATED நாகை உழவர்சந்தை கீழ்வேளூரில் 100 நாள்...