×

அறுவடை நேரத்தில் சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்கள் அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னரில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

அரவக்குறிச்சி, பிப்.8: அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னரில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக ஒன்றிய மற்றும் பேரூர் கழகம் சார்பில் மாலை, பூங்கொத்து கொடுத்து கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கரூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் மணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பேரூர் செயலாளர் அண்ணாதுரை ஆகியோர், பேண்டு வாத்தியம் முழங்க, மலர் மாலை, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராமான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை ஆர்வமுடன் கை தட்டி ரசித்துக் கேட்டனர். இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி பேரூர் கழக இளைஞரணி ஆனந்தகுமார், நிர்வாகிகள், ஜீவனந்தம், முத்துராவி, முபாரக் அலி, ஸ்டெல்லா மேரி, கேபிள் சரவணன், காமாட்சி, சரவணன், அரவிந்த், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் கார்த்தி, சேகர் உள்ளிட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர், இதே போல பள்ளபட்டி ஷாநகர் கார்னரில் பேரூர் செயலாளர் தோட்டம் பசீர் அகமது தலைமையில் திமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

Tags : DMK ,Udayanithi Stalin ,Aravakurichi Pungambadi Corner ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு