×

சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மருத்துவமனையில் சேர்த்த ஐ.பெரியசாமி

சின்னாளபட்டி, பிப்.8: செம்பட்டி அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை ஐ.பெரியசாமி எம்எல்ஏ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டியில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் வீட்டு திருமண விழாவிற்கு நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது ஆதிலட்சுமிபுரம்-கோழிப்பண்ணை சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய காயங்களுடன் துடி, துடித்துக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த ஐ.பெரியசாமி உடனடியாக காரை நிறுத்தி கீழே விழுந்து கிடந்த இளைஞரை தூக்கி அவருக்கு முதலுதவி செய்ய ஏற்பாடு செய்ததோடு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். சாலையில் விழுந்து கிடந்த இளைஞரை மனித நேயத்தோடு காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஐ.பெரியசாமியை ஆத்தூர் கிராமமக்கள் பாராட்டினர். சம்பவத்தின் போது மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கும்பம்பட்டி விவேகானந்தன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : I. Periyasamy ,hospital ,road accident ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...