சென்னை: முடிமாற்று அறுவை சிகிச்சை குறித்து போதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. மாசுகட்டுப்பாடு, மருந்தக உரிமம், ரத்த வங்கி உரிமம், லிப்ட் உரிமம் உள்ளிட்டவை பெற்றிருக்க வேண்டும், தகுதி வாய்ந்த தோல் மருத்துவர், பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், முடி மாற்று அறுவை சிகிச்சை வழங்கும் நிறுவனங்கள் சுகாதாரச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
