×

பாபர் மசூதி பெயரை பயன்படுத்த தடை இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதியை கட்டப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இது அரசியல் ரீதியிலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,” நாடு முழுவதும் பாபர் மசூதி என பெயரிடவோ அல்லது அத்தகைய பேர்களில் மசூதிகள் கட்டவோ தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேற்கண்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது , வழக்கை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Babri ,Masjid ,Supreme Court ,New Delhi ,Trinamool Congress ,MLA ,Humayun Kabir ,Murshidabad, West Bengal ,
× RELATED ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் சென்னை பயணம் ரத்து..!