- அசாம்
- முதல் அமைச்சர்
- ஜலுக்பாரி
- குவஹாத்தி
- ஹிமந்தா பிஸ்வா சர்மா
- ரினிகி புயான் ஷர்மா
- நந்தி பிஸ்வா ஷர்மா
- பாஜக
- குவஹாட்டி மக்களவை
- பிஜுலி கலிதா மேத்தி…
கவுகாத்தி: அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜலுக்பாரி தொகுதியிலிருந்து தொடர்ந்து ஆறாவது முறையாக மனுத்தாக்கல் செய்தார். அவருடன், அவரது மனைவி ரினிகி புயான் சர்மா, மகன் நந்தில் பிஸ்வா சர்மா, பாஜவின் கவுகாத்தி மக்களவை எம்பி பிஜுலி கலிதா மேதி மற்றும் கவுகாத்தி மேயர் ம்ரிகேன் சரனியா ஆகியோர் உடன் சென்றனர். வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்காக காம்ரூப் (பெருநகரம்) மாவட்டத் தேர்தல் அலுவலகத்தை அடைவதற்கு முன்பு, முதல்வர் ஒரு திறந்த வாகனத்தின் மீது நின்றவாறு, கானாபாராவில் உள்ள கால்நடை மருத்துவ மைதானத்திலிருந்து ஹெங்ராபாரியில் உள்ள தேர்தல் அலுவலகம் வரை சுமார் 5.6 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு பிரம்மாண்டமான ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்.
திஸ்பூரில் உள்ள லாஸ்ட் கேட் பகுதியில் வாகனத்திலிருந்து இறங்கி, சில நிமிடங்கள் நடந்தார். பின்னர் மாவட்ட ஆணையர் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு செல்ல மற்றொரு வாகனத்தில் ஏறினார். அந்த வழியில், பாரம்பரிய ‘கயான்-பயான்’ (பாரம்பரிய பக்தி இசை மற்றும் கலை நிகழ்ச்சிக் குழுவினர்), பிஹு நடனக் கலைஞர்கள் மற்றும் மேளதாளக் கலைஞர்கள் அவரை வரவேற்றனர். அவரது தொகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வந்த இடைவிடாத மழையையும் பொருட்படுத்தாமல், இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிடுகையில்,’சுப நிகழ்வுகள் எப்போதும் தாயின் ஆசியுடனேயே தொடங்க வேண்டும். இப்போதெல்லாம் அவருடன் அதிக நேரம் செலவிட எனக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தாய் அசாம் மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவதற்கான ஆற்றலை அவரது ஆசி எனக்கு எப்போதும் வழங்குகிறது’என்று குறிப்பிட்டு இருந்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு, கனமழையையும் பொருட்படுத்தாமல், தொலைதூரங்களிலிருந்தும் அருகிலிருந்தும் திரண்டு வந்த தனது தொகுதியின் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
