×

பல்கலையை கண்டித்து மூட்டா ஆர்ப்பாட்டம்


நெல்லை, பிப். 5:  மூட்டா 3ம் மண்டலம் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை கண்டித்து பாளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 3ம் மண்டல தலைவர் நசீர் அகமது தலைமை வகித்தார். மூட்டா தலைவர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். மூட்டா சங்க பொதுச்செயலர் நாகராஜன், மண்டல செயலர்கள் ஹெய்ஸ் தாசன், கலைவாணன், மண்டல பொருளாளர் சிவஞானம், முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பட்டதாரி தொகுதி செனட் தேர்தலை நடத்திடாமல் சிண்டிகேட் தேர்தலை நடத்திடும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மண்டல துணை செயலர் கோமதி நாயகம் நன்றி கூறினார். இதில் மூட்டா நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags : Moota ,protest ,university ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...