×

சுப்பிரமணியர் கோவில் நன்னீராட்டு பெருவிழா

போச்சம்பள்ளி, பிப்.5: போச்சம்பள்ளி அருகே, வடம்பலம்பட்டி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை கோவில்  திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருமுறை ஒதுதல், நான்கம் கால வேள்வி மற்றும் 7 மணிக்கு சிவபேரிகைகள், மேள வாத்தியம் முழுங்க பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு சிவவேள்வி நிறைவு பெற்று திருக்குடங்கள் புறப்பாடு முடிந்த பின் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பெண்கள் சீர் வரிசையுடன் காளை, குதிரை நடனத்துடன் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர்.

விழாவையொட்டி போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், கவுன்சிலர் ராஜா, ஊர்கவுண்டர் பிரபு மந்திரிகவுண்டர் சக்கரை, டாக்டர் சண்முகம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Subramanian Temple Freshwater Festival ,
× RELATED கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் ஆயுதங்களுடன் கைது