×

அருமனை அருகே ஆன்லைனில் சட்டை ஆர்டர் செய்தவருக்கு வந்தது கிழிந்த துணி

அருமனை, பிப்.4 : அருமனை  அருகே ஆன்லைன் மூலம் சட்டை ஆர்டர் செய்தவருக்கு பழைய கிழிந்த  துணிகள் அனுப்பி ைவக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சமீபகாலமாக பேஸ்-புக் மூலம் ஆன்லைன் ஆர்டர்களை பெறும் பல நிறுவனங்கள்  தங்களை விளம்பரப்படுத்தி வருகின்றன. அருமனையை அடுத்த  ஒரு கிராமத்தை சேர்ந்த  வாலிபர் ஒருவர் அழகான தரமான சட்டைகளை ஆன்லைன் விளம்பரம் மூலம் பார்த்துள்ளார். நல்ல தரமான சட்டைகள்,  நியாயமான விலையில் கிடைப்பதாக அவருக்கு தோன்றியது.  இதையடுத்து அந்த  வாலிபர் 3  சட்டைகளை ஆர்டர் செய்துள்ளார். அடுத்த சில தினங்களில்  வாலிபருக்கு பார்சல் வந்துள்ளது. அவர் பணத்தை செலுத்தி பார்சலை  பெற்றுக்கொண்டார்.  ஆவலுடன் பார்சலை திறந்து பார்த்தபோது கடும்  அதிர்ச்சி அடைந்தார். அதில் பழைய கிழிந்துபோன துணிகள் இருந்துள்ளன.  இதனால் அந்த வாலிபர் செய்வதறியாது உறைந்து போயுள்ளார். இதுபோல்  கல்லூரி  மாணவி ஒருவர் சுடிதார் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கும்  கிழிந்த பழைய  துணியே வந்துள்ளது.  குமரி மாவட்டத்தில் பலர் இது போல் ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags : Arumana ,
× RELATED அருமனை அருகே கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு