சென்னை: கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது;
கௌரவ அமைச்சர் துரை முருகன், 87 வயது, கால் வலி காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது, மேலும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழுவால் வார்டில் அனுமதிக்கப்படுகிறார். வலிக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, அடுத்த சில நாட்களுக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்.
