×

இன்று 52வது நினைவு தினம் அனுசரிப்பு கே.என்.நேரு தலைமையில் அண்ணாசிலைக்கு மாலை அணிவிப்பு திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் அறிக்கை

திருச்சி, பிப். 3: திருச்சி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாளை முன்னிட்டு மத்திய மாவட்ட திமுக சார்பில் இன்று (3ம் தேதி) சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலை, கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் திருச்சி மத்திய மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்று அண்ணாவிற்கு மரியாதை செலுத்த வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Remembrance Day ,
× RELATED பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்:...