தோகைமலை, பிப்.3: தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி குப்பமேட்டுபட்டி ஒத்தவீடு பகுதியில் ராஜலிங்மூர்த்தி, கொப்பாட்டியம்மன், கருப்பசாமி, மதுரைவீரசாமி, பட்டவன் மற்றும் பரிவார சாமிகளுக்கு தனித்தனியாக கோயில்கள் உள்ளது. இக் கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த காவிரியில் இருந்து தீர்த்த குடங்கள் கொண்டுவரப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ராஜலிங்மூர்த்தி, கொப்பாட்டியம்மன், கருப்பசாமி, மதுரைவீரசாமி, பட்டவன் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஒத்தவீடு, சிங்கம்பட்டி பங்காளிகள், விழா கமிட்டியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.