ஒடிசா: ஒடிசா – சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து அக்னி-3 ஏவுகணை இன்று வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர். இந்திய ராணுவம் நடத்திய இந்த சோதனையில், ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்ப அளவுகோல்களும் மிக துல்லியமாக எட்டப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சுமார் 3,500 கி.மீ. வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகும்.
