×

மயிலாப்பூர் நகைக்கடையில் 30 கிலோ வெள்ளி நகையுடன் மாயமான ஊழியருக்கு வலை

சென்னை: மயிலாப்பூர் வெங்கடாசலம் தெருவில் உள்ள சில்வர் எம்போரியம் என்ற நகைக்கடை உரிமையாளர் ரோஷன் குமார், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கடையில் ராஜஸ்தானை சேர்ந்த  சேட்டன் சிங் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம், சவுகார்பேட்டையில் உள்ள ஒரு கடையில் இருந்து 30 கிலோ வெள்ளி பொருட்களை வாங்கி வரச் சொன்னேன்.  அதன்படி, மேற்கண்ட கடையில் இருந்து வெள்ளி  பொருட்களை வாங்கிய அவர், திடீரென மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து, 30 கிலோ வெள்ளியை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : jewelery shop ,Mylapore ,
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது