×

56 குவார்ட்டர் பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.30: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செங்குடி மற்றும் மோர் பண்ணை பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி பஸ் ஸ்டாப் அருகே ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த முத்தூரை சேர்ந்த செல்லையா மகன் உதயக்குமார்(30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 46 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் மோர்பண்ணை கிராமத்தில் திருப்பாலைக்குடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் அரியசெல்வம் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்