×

எருமப்பட்டி அருகே அரசு பஸ் மோதி வாலிபர் சாவு

சேந்தமங்கலம், ஜன.30: திருச்சி  மாவட்டம், தொட்டியம் அடுத்த கோவிந்தபுரத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி மகன் தினேஷ்குமார்(22). இவர் நேற்று தனது டூவீலரில்,  எருமப்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு, டூவீலருக்கு பெட்ரோல் போட பொன்னேரி கைகாட்டி அருகே பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். வழியில் எருமப்பட்டி புதிய  பஸ் நிலையத்தில் இருந்து வந்த அரசு பஸ், டூவீலரில் நேருக்குநேர்  மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ்குமார், தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல்  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் நேற்று  உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Erumappatti ,
× RELATED எருமப்பட்டி அருகே பனைமரங்கள் வெட்டி சாய்ப்பு-போலீசார் விசாரணை