×

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வக்கீல் அணி ஆலோசனை கூட்டம்

தென்காசி, ஜன.30: தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக வக்கீல் அணி சார்பில் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். நகர திமுக செயலாளர் சாதிர், வக்கீல்கள் ஜெகதீசன், ராஜா, முகம்மது ரபி, ஜான் தாமஸ் கேண்டர், அய்யாக்காளை முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் வேலுச்சாமி வரவேற்றார். மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் முருகன், முத்துராமலிங்கம், ஆலடி மானா, ராஜா, ஜெயக்குமார், பிரபாகரன், அன்புச்செல்வன், கண்ணன், செல்லத்துரை, ரகுமான் சாதத், கண்ணன், கருப்பசாமி, பாண்டித்துரை, சிவக்குமார், அலெக்சாண்டர், வளன் ராஜா, ராஜு, பிரவீன் ராம்,காளிராஜ், விஜயகுமார்,ராமர் பாண்டி,பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, ஜெகதீசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமித்துரை, வல்லம் செல்வம், ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் ஷேக்பரீத்,பால்ராஜ், சுப்பிரமணியன், ராமராஜ், பரமசிவன், ஆயிரப்பேரி முத்துவேல், மாரியப்பன், கேசவ ராம்சிங், நன்னை சுந்தர், சுரேஷ் கண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார்.

 கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு புதிதாக வழக்கறிஞர் அணி நிர்வாகிகளை நியமனம் செய்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும்,  சட்டத்துறை நிர்வாகிகளுக்கும், பரிந்துரை செய்த மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பது, குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மத்திய அரசை கண்டிப்பது, அதற்கு துணையாக நின்ற அதிமுக அரசையும் கண்டிப்பது, குடியரசு தினத்தன்று தென்காசியில் இரு சக்கர வாகன பேரணியில் பங்கேற்ற அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது, பிப்ரவரி மாதம் 7ம் தேதி சங்கரன்கோவிலில் தலைவர் ஸ்டாலின் பங்கு பெறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்பது, வரும் சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக களப்பணியாற்றி தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க அரும்பாடு பட வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Tenkasi South District DMK Bar Team Consultative Meeting ,
× RELATED உச்சிப்புளி அரசு பண்ணையில் இரண்டு ரகத்தில் தென்னங்கன்று விற்பனை