×

மீன்சுருட்டி அருகே பைக் மீது அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பரிதாப பலி

ஜெயங்கொண்டம், ஜன.29: மீன்சுருட்டி அருகே பைக் மீது அரசு பஸ்மோதி லாரி டிரைவர் ஒருவர் பலியானார். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள் அழகன் (32).
இவர் சென்னையில் மினி லாரி டிரைவராக வேலை பார்த்து வந்ததார். இவருக்கு மனிஷா (24) என்ற மனைவியும், அபிஷா, வெண்பா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அருள்அழகன் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தனது பைக்கில் சொந்த வேலையாக மீன்சுருட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சம்போடை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த அரசு டவுன் பஸ் இவர் ஓட்டி சென்ற பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்கு பதிவு செய்து, பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags : Truck driver ,
× RELATED விவசாயியை தாக்கிய லாரி டிரைவருக்கு வலை