திருச்சி,ஜன.26:திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஜன.24ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மில் காலனி அருகே கஞ்சா விற்ற புங்கனூர் காந்திநகரைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் (40) என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
