×

மாரடைப்பால் ராணுவ வீரர் பலி

குடியாத்தம், ஜன.29: குடியாத்தம் அருகே ராணுவ வீரர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். குடியாத்தம் அடுத்த கிருஷ்ணம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(50), ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிலாவேணி. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் முனுசாமி, சொந்த கிராமத்திற்கு வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் முனுசாமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முனுசாமி வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Army ,soldier ,
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!