×

கூலித்தொழிலாளி, மாணவி தற்கொலை

கிருஷ்ணகிரி, ஜன.29: கெலமங்கலம் அடுத்த போடிச்சிப்பள்ளியைச் சேர்ந்த கூலி தொழிலாளி நரசிம்மன்(40).  குடிப்பழக்கம் உள்ள இவர், சம்பாதிக்கும் பணத்தை குடிப்பதற்காகவே செலவு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன்- மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டதால், கோபித்துக்கொண்டு வெளியே சென்ற  நரசிம்மன், கூர்லன்கொட்டாய் என்னுமிடத்தில் உள்ள மரத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், கெலமங்கலம் அருகே குந்துமாரனப்பள்ளியைச் சேர்ந்தவர்  வெங்கடேஷ். இவரது மகள் திருவேணி(17), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். வெங்கடேஷ் கடந்த  ஒரு வருடத்திற்கு முன்பு மரத்தில் இருந்து கீழே விழுந்ததில், இடுப்பு  எலும்பு உடைந்து படுத்த படுக்கையாக உள்ளார். இதனால், மனவேதனையடைந்த  திருவேணி, கடந்த 26ம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி திருவேணி உயிரிழந்தார். இதுகுறித்து கெலமங்கலம் இன்ஸ்பெக்டர் கமலேசன் விசாரிக்கிறார்.

Tags :
× RELATED தனியார் ஊழியரிடம் ₹2.52 லட்சம் மோசடி