×

மாட்டுவண்டி பந்தயத்தில் அவனியாபுரம் முதலிடம்

சாயல்குடி, ஜன.28:  தை மாதம் உழவர்தினத்தை முன்னிட்டு கடலாடியில் இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. கடலாடி-முதுகுளத்தூர் சாலையில் 8 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பெரியமாடுகள் போட்டியில் 10 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் மதுரை அவனியாபுரம் மோகன சாமியின் மாடுகள் முதல் இடத்தையும், சித்திரங்குடி ராம மூர்த்தியின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், கீழத்தூவல் லெட்சுமணனின் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

6 கிலோமீட்டர் தூரம் நடந்த சின்னமாடுகள் வண்டி போட்டியில் 12 வண்டிகள் கலந்துகொண்டது. இதில் கே.வேப்பங்குளம் நல்லுத்தேவரின் மாடுகள் முதல் இடத்தையும், விருதுநகர் பூலாங்கால் மாடுகள் இரண்டாம் இடத்தையும், பாப்பாகுளம் ஜெகநாதனின் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கு ரொக்கபரிசும், குத்துவிளக்கு போன்ற சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆப்பநாடு மாட்டுவண்டி பந்தயகுழுவினர் செய்திருந்தனர்.

Tags : Avaniapuram ,cattle race ,
× RELATED சித்திரை மாத பிரமோற்சவ தோரோட்டம்...