×

மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

மதுரை, ஜன. 27: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மதுரை மாவட்டத்தில், 10 சட்டமன்ற தொகுதிகளில், தேர்தல் நடத்தும் அலுவலர்களின் விபரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு, மேலூர் ஆர்.டி.ஓ ரமேஷ், மதுரை கிழக்கு தொகுதிக்கு மதுரை ஆர்.டி.ஓ முருகானந்தம், சோழவந்தான் தொகுதிக்கு மாவட்ட பிற்பட்டோர் சிறுபான்மையின நல அலுவலர், மதுரை வடக்கு தொகுதிக்கு மாநகராட்சி மண்டலம்-2 (வடக்கு) உதவி ஆணையர் பிரேம்குமார், மதுரை தெற்கு தொகுதிக்கு மண்டலம்-3 (கிழக்கு மண்டலம்) உதவி ஆணையர் சண்முகம், மதுரை மத்திய தொகுதிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கோட்டூர்சாமி, மதுரை மேற்கு தொகுதிக்கு மாவட்ட கலால் உதவி ஆணையர் விஜயா, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி, திருமங்கலம் தொகுதிக்கு ஆர்.டிஓ. சவுந்தர்யா, உசிலம்பட்டி தொகுதிக்கு உசிலம்பட்டி ஆர்.டிஓ ராஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கீழ் ஒரு தொகுதிக்கு 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தாசில்தார்கள்.

Tags : Election Officers ,Madurai District ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை