பொள்ளாச்சி, ஜன. 26: கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னணியினர், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் நிர்வாகத்தினரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில், இந்த ஆண்டில் குண்டம் திருவிழா நடைபெறுமா என்ற ஐயப்பாடு பக்தர்களிடம் நிலவி வருகிறது. இதனை போக்கும் வகையில், கோயில் திருவிழா சம்பந்தபட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திருவிழா நடைபெற்று வருவதுபோல், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலிலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது திருவிழா நடைபெற, இந்து அறநிலையத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.