கோவை, ஜன. 26: ஆடை அலங்கார துறையில் இந்திய அளவில் சாதிக்க துடிக்கும், இளம் தொழில் முனைவோர் இணைந்து சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு போன்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென்னிந்திய அளவிலான ‘என் நைட்’ எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்தினர். கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடந்த இதில் சென்னை, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் இருந்து பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். மின்னொளியில் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யாரமாக நடை போட்டு வந்து பார்வையாளர்களை போட்டியாளர்கள் கவர்ந்தனர். பிரபல சின்னதிரை நடிகை ஆலியா மானசா,நடிகர் ராஜீவ் பிள்ளை ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று, சிறந்த ஆடைகளை வடிவமைத்த குழுவினருக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர்.