×

காசி மீது மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

நாகர்கோவில், ஜன.26: நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி,  சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களுடன் பழகி அவர்களை காதலிப்பது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் காசி மற்றும் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதில் காசி மீதான கந்துவட்டி வழக்கு மற்றும் விமான பணிப்பெண் ஒருவரை ஏமாற்றிய வழக்கில் ஏற்கனவே நாகர்கோவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று, நாகர்கோவிலை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் ஒருவரை காதலிப்பது போல் நடித்து, பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய வழக்கில் 3வது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார்  நாகர்கோவில் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். சிபிசிஐடி போலீசார் நேரடியாக பதிவு செய்த வழக்கில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  காசி மீது மொத்தம் 7 வழக்குகள் உள்ள நிலையில், இதுவரை 3 வழக்குகளுக்கான குற்றப்பத்திரிகை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Kasi ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...