×

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனுடன் வசித்து வந்த இளம்பெண் தற்கொலை

திருமலை: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வசித்து வந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் முனிகேபள்ளி மாணிக்நாயக் கிராமத்தை சேர்ந்தவர் காந்த்(24). கட்பால் விட்டல்நாயக் தண்டா கிராமத்தை சேர்ந்தவர் காவேரி(23). இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த அவர்கள், தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் இவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காந்த், காவேரி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் இருவரும் ஐதராபாத்தில் பாலாபூர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு காவேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதையறிந்த காவேரியின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த பாலாபூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பின் காவேரியின் சடலம் ேநற்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவேரியின் சடலத்தை காந்த் வீட்டின் முன் வைத்து போராட்டம் நடத்தினர். ேமலும் காவேரியின் சாவுக்கு காந்த்தான் காரணம், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் சடலத்தை அடக்கம் செய்தனர். இதுகுறித்து காங்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tirumala ,Kanth ,Munikepalli Maniknayak ,Sangareddy district of Telangana ,Kaveri ,Katpal Vittalnayak Thanda ,
× RELATED ஒன்றிய அரசைக் கண்டித்து ஜன.12ம் தேதி...