×

பனிமூட்டம் காரணமாக ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள் சற்று தாமதமாக வருகை தருகின்றன. குறிப்பாக, கர்நாடகாவில் இருந்து நேற்று வந்த மங்களூரு விரைவு ரயில், அசோகபுரம் காவிரி விரைவு ரயில் காலதாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதேபோல, பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரயில்களும் 15 நிமிடம் காலதாமதமாக வருகின்றன. மேலும், அரக்கோணம்-சென்னை கடற்கரை, திருவள்ளூர்-பொன்னேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும் பனிமூட்டத்தால் சற்று தாமதமாக வருகின்றன.

Tags : Chennai ,Chennai Central ,Karnataka ,
× RELATED ஆழியாறு அணையிலிருந்து ஜன.2ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு