- விஜய் ஹசாரே டிராபி
- சின்னசுவாமி ஸ்டேடியம்
- பெங்களூரு
- ராயல் சேலஞ்சர்ஸ்
- பெங்களூர்
- சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம்
பெங்களூரு: நாளை (டிசம்பர் 24) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர். இதன் பின்னர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தொடர்பாக, விதான் சவுதாவில் கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா ஆலோசனை நடத்தினார். இதில் விஜய் ஹசாரே டிராபி போட்டியை பார்வையாளர்களை அனுமதிக்காமல் மைதானத்தில் நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்து ஆராய அமைக்கப்பட்டக் குழு திங்கள்கிழமை மைதானத்திற்குச் சென்று ஆய்வு செய்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
