ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். ஜாவா தீவில் 34 பயணிகளுடன் சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது. விபத்தில் 16 பயணிகள் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
