டெல்லி : உலக அளவில் ஊக்கமருந்து பரிசோதனையில் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். WADA அமைப்பு 2024ல் நடத்திய சோதனையில் இந்தியாவைச் சேர்ந்த 260 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஊக்கமருந்து பரிசோதனையில் பிரான்ஸைச் சேர்ந்த 91 வீரர்கள் தோல்வி அடைந்துள்ளனர். ஊக்க மருந்து சோதனை தோல்வியில் இந்தியா தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
