நத்தம், ஜன. 19: திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை சேர்ந்தவர் அப்துல்நாசர். இவர், பஹ்ரைன் நாட்டில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த எட்டு தினங்களுக்கு முன் மரணமடைந்தார். அப்துல்நாசரின் உடலைக் கொண்டு வருவதற்கு, அவரது குடும்பத்தினர் எஸ்டிபிஐ கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் லத்திப்பை தொடர்பு கொண்டனர். இதன்படி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட எஸ்டிபிஐ சார்பில் அதற்காக குழு அமைத்து வெளிநாடு வாழ் சகோதர அமைப்பான இந்தியன் சோசியல் ஃபோரம் உதவியை நாடினர். இதன் மூலம் அந்த நாட்டினுடைய முறைப்படி சட்டரீதியான உதவிகளை செய்து, இறந்தவரின் உடலை பெற்று, கடந்த 17ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதி செயலாளர் ஹாஜி அபுதாஹிர் தலைமையிலான நிர்வாகிகள் சென்னையில் இருந்து உடலை பெற்று நத்தத்திற்கு கொண்டு வந்து நேற்று நத்தம் தெற்கு தெரு தொழுகை பள்ளிவாசன் கப்ருஸ்தானில் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.