வாஷிங்டன்: உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3ம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சென்ற மாதம் மட்டும் 25,000 பேர் உக்ரைன் போரில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள்; உக்ரைன் போரில் மக்கள் கொல்லப்படுவதை தடுக்கவே அமெரிக்கா விரும்புகிறது. போரை நிறுத்த அமெரிக்கா கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது.
