×

கயத்தாறில் பழுதான சாலை சீரமைக்கப்படுமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கயத்தாறு ஜன,12: கயத்தாறில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கயத்தாறில் இருந்து வடக்கு மயிலோடை, கொத்தாளி, பரிவல்லிக்கோட்டை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தெற்கு சுப்பிரமணியபுரத்திலுள்ள ஒரு கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்கு அருகில் தற்போது பெய்துவரும் மழையினால் பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பள்ளத்தில் இறங்காமல் இருக்க ரோட்டின் ஓரத்தில் ஒதுங்கி சென்ற கல் ஏற்றிவந்த லாரியின் சக்கரங்கள் மண்ணில் புதைந்து போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தியது. இந்த சாலையை பயன்படுத்தியே சுற்று வட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சைக்கிள்களில் அருகிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து சென்றனர். தற்போது பள்ளி திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அரசு கவனத்தில் கொண்டு இந்த சாலையினை புதுப்பித்து தரவேண்டும் என்பதே சுற்றுவட்டார மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : dirt road ,Kayathar ,
× RELATED கயத்தாறு அருகே துணிகரம் வீட்டை உடைத்து 65 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் கொள்ளை