×

நெல்லையில் பாஜ பொங்கல் விழா மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்பு

நெல்லை, ஜன. 11: நெல்லையில் பாஜ சார்பில் நடந்த பொங்கல் விழாவில் மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் பொங்கல் விழா அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் நடந்து வரும் பொங்கல் விழாவில் நான் பங்கேற்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து  வருகிறேன். இந்த விழாக்களில் தமிழர்களின் பாரம்பரியமான இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாக்களில் சிறுமிகள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கெடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேட்டியின் போது தெரிவித்தார்.
இதனையடுத்து சிறுவர், சிறுமிகளின் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பாஜ மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் மகாராஜன், மாவட்ட செயலாளர் முத்துபலவேசம், மாவட்ட பொது செயலாளர்கள் முத்துகுமார், கணேசமூர்த்தி, தமிழ்செல்வின், முன்னாள் மாவட்ட நிர்வாகி தயாசங்கர், மாவட்ட பார்வையாளர் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் கட்டளை எஸ் ஜோதி மற்றும் மகளிர் அணி, நிர்வாகிகள், மாவட்ட, மாநில மண்டல நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : L. Murugan ,Baja Pongal Festival ,Nellai ,
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...