×

முதல்முறை வாக்காளர்கள் வேகமாக வாக்குப்பதிவு: ஒன்றிய இணை அமைச்சர் பாராட்டு

சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வாக்களித்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: இந்த நாட்டின் வளர்ச்சி தேசத்தினுடைய வளர்ச்சி என்பதை மனதில் வைத்தும், இந்த தேசம் 2047ல் வல்லரசாக வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். இதில் கூடுதல் சிறப்பாக முதல் முறை வாக்காளர்கள் இந்த முறை மிக வேகமாக தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ததை பல இடங்களில் பார்க்க முடிந்தது. இதில் அடுத்த 25 ஆண்டு காலத்தில் இந்த தேசத்தை ஆளப் போகிறவர்கள் இந்த முதல் முறை வாக்கு செலுத்தக்கூடிய வாக்காளர்கள் தான். நான் வாக்கு செலுத்த வந்த இந்த வாக்கு சாவடி மையத்தில் ஏற்பாடுகளும் சிறப்பாக தான் இருக்கிறது. வாக்கு மையத்தை பொறுத்தவரை அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

The post முதல்முறை வாக்காளர்கள் வேகமாக வாக்குப்பதிவு: ஒன்றிய இணை அமைச்சர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Union Minister of State ,Chennai ,L. Murugan ,Koyambedu ,
× RELATED தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்