சேலம்: சேலம் மாநகரில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வந்த பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி வழங்குவதற்கான ஆணையையும் வழங்கினார்.
